×

சின்னாறு கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பெரம்பலூர், மே 7: பெரம்பலூர் அருகே சின்னாறு கிராமத்தில் ஆளில்லாத வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32). இவர் கடந்த 5ம் தேதி மதியம் வீட்டை பூட்டி விட்டு திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டின் கரும காரியத்திற்காக சென்றார். நேற்று அதிகாலை கோவிந்தராஜிக்கு பக்கத்து வீட்டுக்காரரான ரவிச்சந்திரன் மனைவி ராதா (40) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து வீட்டின் உரிமையாளரான கோவிந்தராஜ், துறையூரில் இருந்து புறப்பட்டு வந்து பார்த்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ள கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதிலிருந்த 10 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார். கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.



Tags : village ,house ,Chinnar ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...