×

அரியலூர் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு3

ஜெயங்கொண்டம், மே 3: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன்  கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், ஆவிச்சரமடையார், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஜெயங்கொண்டம் கழுமாலைநாதர் கோவில்களில் நந்தியம்பெருமானின் பிரகார உலா நடந்தது. செந்துறை:  செந்துறை சிவதாண்டேஸ்வரர் கோயிலில் நந்தியம்பெருமானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து சிவதாண்டேஸ்வரர் மற்றும் அம்பாளுக்கு பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காளை வாகனத்தில் பிரகார வீதியுலா நடந்தது. இதேபோல் குழுமூர் ஜெயபுரீஸ்வரர், சென்னிவனம் தீர்க்கபுரீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர், நாகல்குழி காசி விஸ்வநாதர், சொக்கநாதபுரம் சொக்கநாதர், பழமலைநாதபுரம் பழமலைநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Tags : Prado ,temples ,Shiva ,Ariyalur 3 ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு