×

கோயில் சிற்ப தொழிலாளர்கள் சங்க ஆண்டு விழா

ஜெயங்கொண்டம், மே 3: ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு கோயில் சிற்ப தொழிலாளர்கள் சங்கம் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத்தலைவர் ஓவியர் சிவானந்தம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஸ்தபதி நடராஜன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கைபரப்பு செயலாளர் ஸ்தபதி பன்னீர்செல்வம் கல்வெட்டு மற்றும் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் பெரிய கிருஷ்ணாபுரம் கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் பெரியகிருஷ்ணாபுரம் கிளைத்தலைவர் சின்னையன் நன்றி கூறினார்.

Tags : Temple Sculptors Association Anniversary ,
× RELATED சீனிவாசன் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் சாதனை