நாகை, மே 3: சிக்கல் சடைச்சிமுத்து காளியம்மன்கோயில் மஹோத்சவ திருவிழா பூச்சொரிதலுடன் இன்று துவங்குகிறது.நாகையை அடுத்த சிக்கல் சங்கமங்கலம் சடைச்சிமுத்து காளியம்மன் கோயில் மஹோற்சவ திருவிழா இன்று பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. வரும் 6ம் தேதி பால்காவடி அபிஷேகமும், துர்க்கையம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. 7ம் தேதி வரிசை எடுத்தல், சிறப்பு அபிஷேகமும், பின்னர் சடைச்சிமுத்து காளியம்மன் புறப்பாடு நடனத்துடன் படுகளம் சென்று வீதிப்பிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9ம் தேதி அம்பாள் வெள்ளையணிந்து ஆலயம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 14ம்தேதி கும்பபூஜை, கஞ்சி வாத்தலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், விழா குழுவினர்
செய்து வருகின்றனர்.