நாகை, மே 3: நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செல்பட்டு வருகிறது.
அதன்படி மாணவர்களுக்கு விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், நெய்வேலி, சென்னை, நாமக்கல், ஆகிய இடங்களிலும், மாணவிகளுக்கு விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்கலும் செயல்படுகிறது. 7,8,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை அந்தந்த மாவட்ட அளவில் தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது. 2019-20ம் ஆண்டு சேர்க்கைக்கான படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இளையதளத்தில் ஆன்லைன் வழியாக பூர்த்தி செய்து விண்ணப்பங்களை மே 7ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணவித்தவர்களுக்கு மே 9ம் தேதி நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு நடைபெற உள்ளது.