×

பெண் போலீசுடன் தனிமையில் இருந்த டிஎஸ்பி: கையும், களவுமாக பிடித்து வீட்டுக்கு பூட்டு போட்ட உறவினர்கள்

திருச்சி:திருச்சியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவருக்கும், நாகப்பட்டினம் மாவட்ட டிஎஸ்பி ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் போலீஸ் உறவினர்களுக்கு தெரியவந்தது. டிஎஸ்பியும், பெண் போலீசும் தனிமையில் இருப்பதை அறிந்த உறவினர்கள் நேற்றுமுன்தினம் இரவு சுப்ரமணியபுரம் சென்றனர்.

அப்போது இருவரும் வீட்டுக்குள் தனிமையில் இருந்ததை உறுதி செய்தனர். பின்னர் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு உறவினர்கள் சென்றனர். இது தொடர்பாக, பெண் போலீஸ் வேலை பார்த்து வரும் காவல்நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடன் அங்கு சென்ற போலீசார், பெண் போலீசை வெளியில் வரும்படி கூறியுள்ளனர். அவர் வெளியில் வரமறுத்ததுடன், கையில் கத்தியை எடுத்துக்கொண்டு கை நரம்பை வெட்டி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து போலீசார், அவரிடம் சமாதானமாக பேசியதோடு அவரை வெளியில் வரவழைத்து உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.  இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘இருவரும் சம்மதத்துடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர். இது அவர்களது சொந்த விஷயமாக இருக்கலாம். இருப்பினும் பெண் போலீசாரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post பெண் போலீசுடன் தனிமையில் இருந்த டிஎஸ்பி: கையும், களவுமாக பிடித்து வீட்டுக்கு பூட்டு போட்ட உறவினர்கள் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Nagapattinam district ,Subramaniapuram ,Dinakaran ,
× RELATED விருது தொகையில் சமூக சேவை பள்ளி மாணவியின் அரிய பணி