×

ஞாயிறு தோறும் படியுங்கள் குண்டாற்றில் மணல் திருட்டு 2 டிப்பர் லாரி பறிமுதல்

திருச்சுழி, மே 1: திருச்சுழி அருகே உடையனேந்தல், கிருஷ்ணாபுரம், பனையூர், பிள்ளையார்நத்தம், கரிசல்குளம், சாமிநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள குண்டாற்று பகுதி மற்றும் பட்டா நிலங்களில், அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக புகார் எழுந்து வருகிறது.இந்நிலையில், உடையனேந்தல் குண்டாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக, திருச்சுழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு மணல் அள்ளிய ஒருவரை பிடித்தனர்; ஒருவர் தப்பியோடினர். இது தொடர்பாக திருச்சுழி சந்தை ஊருணி தெருவைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரை கைது செய்தனர். மணல் அள்ளிய 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மற்றொரு லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை திருச்சுழி போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Sandy Thunderstorm ,Dipper ,
× RELATED கோவை அருகே டிப்பர் லாரியும், காரும்...