ஆத்தூர், மே 1: ஆத்தூர் விநாயகபுரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. 7ம் நாளான நேற்று மாலை பக்தர்கள் விமான அலகு குத்தி வீதி உலா வந்தனர். நரசிங்கபுரம் விநாயகபுரம், உடையார்பாளையம், காமராஜனார் சாலை, காந்திநகர், தெற்குகாடு வழியாக வந்து கோயிலை அடைந்தனர். இன்று(மே 1ம் தேதி) காலை பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆத்தூர் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.