×

வீட்டின் முன்பு நிறுத்திய கார் திருட்டு

சேலம், செப்.26: சேலம் அமானி கொண்டலாம்பட்டி அடுத்த கரட்டூர் பிள்ளையார் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (35). இவர் தனது பயன்பாட்டிற்காக கார் ஒன்றை வைத்திருந்தார். கடந்த 22ம் தேதி இரவு, தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு, உறங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் மாயமானது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் ஜெயராமன் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் முன்பு நிறுத்திய கார் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Jayaraman ,Karatur Pilliyar Nagar ,Salem Amani Kondlampatti ,
× RELATED சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா