×

நீடாமங்கலம் அருகே பரபரப்பு வாட்ஸ் அப்பில் அவதூறு கண்டித்து சாலைமறியல்

நீடாமங்கலம், ஏப். 26: வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறு பரப்பியதை கண்டித்து நீடாமங்கலம் அருகில் கோவில்வெண்ணி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நேற்று சாலை மறியல் செய்தனர்.  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை பற்றியும், அவர்களது சமூகத்தை பற்றியும் அவதூறாக பேசியது வைரலாக பரவியது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள கோவில் வெண்ணி கிராமத்தில் வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கைது  செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று 150 பெண்கள் உள்ளிட்ட 300 பேர் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக் மற்றும் நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்திய பிறகு சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த சாலையில் முக்கால் மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Tags : scandal ,Neidamangalam ,
× RELATED பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி...