×

பர்கூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் தீ நகை, பணம் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி, ஏப்.26:  பர்கூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில், ரொக்கம், நகை மற்றும் பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட எர்கெட்டு பகுதியை சேர்ந்தவர் குடியப்பன்(60). இவரது தம்பி கெஞ்சப்பன்(55), பக்கத்தில் உள்ள பனை ஓலை குடிசையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சகோதரர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் திடீரென இருவரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இதை கண்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

இதையடுத்து, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த  நிலைய அலுவலர் ஆனந்தன், வீரர்கள் பழனி, கோவிந்தசாமி, மரியண்ணன் ஆகியோர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 2 வீடுகளும் முற்றிலுமாக எரிந்து, அதில் இருந்த நகை, ரொக்கம் மற்றும் பொருட்கள் நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றதால், அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : houses ,Bargar ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...