×

கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், ஏப்.26: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் உடையவர் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் கலந்து கொண்டு பேசினார். நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், திமுக வேட்பாளரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, மாநில மகளிர் தொண்டரணி இணைச்செயலாளர் ராணி, மாவட்ட துணைச்செயலாளர் விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியம், அழகரசு, வனிதா செங்கோட்டையன், நகர பொறுப்பாளர் ஆனந்த், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் அறிவழகன் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,meeting ,Eastern district ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி