×

நாமக்கல்லில் பலத்த சூறைக்காற்றுக்கு 4 மின்கம்பங்கள் சேதம்

நாமக்கல், ஏப்.25: நாமக்கல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், எஸ்.கே.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கரட்டில், ஒரு மரம் சாய்ந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதில், அருகாமையில் இருந்த 4 மின்கம்பங்கள் மற்றும் ஒரு டூவீலர் சேதமடைந்தது.தகவலறிந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்சாரத்தை துண்டித்து, உயிர்சேதம் ஏற்படாமல் தடுத்தனர். தொடர்ந்து, சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் நேற்று பொருத்தப்பட்டது. இதை தொடர்ந்து, பிற்பகலுக்கு மேல் அந்த பகுதியில் மின்வினியோகம் சரி செய்யப்பட்டது.

Tags : weavers ,
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி