நாமக்கல், ஏப்.25: நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி பள்ளி மாணவர்கள், பிளஸ்2 பொதுதேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி ஸ்ரீமதி 582 மதிப்பெண்களுடனும், மாணவர் கவின் 581 மதிப்பெண்களும், மாணவி அக்சயா 577 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். மேலும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 38 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவிகளும் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் மற்றும் பொருளியலில் இருவரும், வணிகவியலில் நான்கு பேரும், கணக்கு பதிவியலில் 11 பேர் மற்றும் வணிக கணிதத்தில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் டாக்டர் குழந்தைவேல், செயலர் சந்திரசேகரன், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.