×

கூடலூர் அருகே யானை பலி

கூடலூர், ஏப்.23: கூடலூர் வனக்கோட்டம் பந்தலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட முன்டகுன்னு வனப்பகுதியில் வயிற்றில் காயங்களுடன் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று கிடப்பதை வனத்துறையினர் நேற்று காலை ரோந்து சென்ற போது பார்த்துள்ளனர். பின் சம்பவ இடத்தில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் இறந்த யானைக்குட்டியை பார்வையிட்டு அதனை கால் நடை மருத்துவர் டேவிட் மோகன் மற்றும் குழுவினர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே குட்டி யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இறந்த யானைக்குட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் மற்ற விலங்குகளுக்கு உணவாக அதே பகுதியில் விடப்பட்டுள்ளது.

Tags : Kodalur ,
× RELATED தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லை...