×

மேச்சேரி அருகே அரசு பஸ்சில் டிரைவர் மர்ம சாவு

மேச்சேரி, ஏப்.23: மேச்சேரி அருகே அரசு பஸ் டிரைவர், மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(57). அரசு பஸ் டிரைவராக 26 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணாகி பேபி என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆனதால், தனித்தனியே வசித்துவருகின்றனர். இவர் ஓமலூர் கிளையில் இயங்கும் சேலம், கீரைகாரனூர் வரை செல்லும் 4ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் டிரைவராக இருந்தார். இவருடன் சாத்தபாடியை சேர்ந்த முருகன்(53) என்பவர் கண்டக்டராக இருந்து வருகிறார்.

அதிகாலையில் கீரைகரானுரில் இருந்து கிளம்பும் பஸ் மேச்சேரி, ஓமலூர் வழியாக சேலம் சென்றடைந்து திரும்பவும், இதே வழியில் நள்ளிரவு கீரைகாரனூரில் நிறுத்தப்பட்டு மீண்டும் அதிகாலையில் பஸ் கிளம்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், பணியை முடித்துவிட்டு கீரைகாரனூரில் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் முருகன் ஆகிய இருவரும் பஸ்சில் தூங்கினர். அதிகாலை பணிக்கு செல்ல முருகன், செல்வராஜை எழுப்பிய போது உடலில் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, செல்வராஜ் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து செல்வராஜின் மனைவி பேபி, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக, மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : death ,Meycheri ,
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை