×

குடிநீர் தட்டுப்பாட்டால் திண்டாடும் பொதுமக்கள்

சிங்கம்புணரி, ஏப்.23: சிங்கம்புணரி அருகே சதூர் வேதமங்கலம் ஊராட்சியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் பொதுமக்கள் தண்ணீர் தேடி தெரு தெருவாக அலையும் நிலை உள்ளது. இதனால் பொது குழாய்களில் காலி குடங்களுடன் பெண்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பகலில் வேலைக்கு செல்லும் பெண்கள் மாலையில் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகம், ருத்தர கோடிஸ்வரர் சாலை மற்றும் காவல் நிலையம் அருகே உள்ள பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீர் பிடிக்க பல மணி நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களில் விற்கப்படும் குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் மேலும் சில இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனம க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Civilians ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை