×

மகிழ்ச்சியில் விவசாயிகள் முன்விரோதம் காரணமாக காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

காளையார்கோவில், ஏப்.22: காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காளையார்கோவில் அருகே நாட்டரசன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் முடிக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாயழகு என்பவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாயழகு அரிவாளால் வெட்டியதில் வினோத் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மருத்துவ பரிசோதனைக்காக, சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர். இந்த ெகாலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : youngsters ,wicker ,Kalaiyarko ,
× RELATED தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பம்