×

காங்கிரஸ் அறிவிப்பு விவசாயிகள் வலியுறுத்தல் காரைக்குடி தேவாலயத்தில் ஈஸ்டர் திருப்பலி

காரைக்குடி, ஏப். 22: காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதனையொட்டி,
பங்குத்தந்தை அருட்திரு எட்வின்ராயன் பாஸ்கா மெழுகுதிரியை ஏற்றினார்.  தொடர்ந்து இறைமக்கள் அனைவரும் அவரவர் மெழுகுதிரியை பற்ற வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், விடியல் இளையோர் இயக்கம் சார்பில் கல்லறையில் இருந்து இயேசு உயிர்த்தெழுந்து வருவது போல செய்திருந்தனர். தொடர்ந்து பங்குதந்தை எட்வின்ராயன், உதவி பங்குத்தந்தை ஒனாசிஸ் பிரபாகரன், அருட்தந்தை செல்வராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். சென்னை பல்கலைக்கழக கிறிஸ்துவ இலக்கிய ஆய்வுத்துறை தலைவர் அருட்திரு ஜேம்ஸ் பொன்னையா சிறப்பு மறையுரை ஆற்றினார். புனித வார அனைத்து நிகழ்வுகளையும், பங்குப் பேரவையினர் பணிக்குழுக்கள், கார்மேல் சபை அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.

Tags : announcement farmers ,Congress ,karachi ,Easter ,church ,Karaikudi ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...