×

கவனிக்குமா காரைக்குடி காவல்துறை? வேளாண்துறை அட்வைஸ் அனைத்து தொகுதிகளிலும் பெண்களின் வாக்குகளே அதிகம்

சிவகங்கை, ஏப்.22: சிவகங்கை மக்களவை தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்துள்ளனர். சிவகங்கை மக்களவை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 390. மொத்த வாக்காளர்களில் பெண்கள் 7 லட்சத்து 84ஆயிரத்து 513. ஆண்கள் 7லட்சத்து 65ஆயிரத்து 811. நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் ஆண்கள் 4லட்சத்து 93ஆயிரத்து 968 பேரும், பெண்கள் 5 லட்சத்து 81 ஆயிரத்து 133பேரும் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களில் ஆண்களை விட 18 ஆயிரத்து 702பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். ஆனால் பதிவான வாக்குகளில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 87ஆயிரத்து 165பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். திருப்பத்தூர் தொகுதியில் 19ஆயிரத்து 920பெண்கள், சிவகங்கை தொகுதியில் 18ஆயிரத்து 241பெண்கள், காரைக்குடி தொகுதியில் 13ஆயிரத்து 507பெண்கள், மானாமதுரை(தனி) தொகுதியில் 10ஆயிரத்து 117பெண்கள், திருமயம் தொகுதியில் 14ஆயிரத்து 931பெண்கள், ஆலங்குடி தொகுதியில் 10ஆயிரத்து 448பெண்கள், ஆண்களைவிட கூடுதலாக வாக்களித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண்களே கூடுதலாக வாக்களித்துள்ளது அரசியல் கட்சியினரிடையே பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

Tags : Karaikudi Police ,women ,constituencies ,
× RELATED புதுக்கோட்டை அருகே வழக்கு...