×

ஜெயங்கொண்டத்தில் மது விற்ற 3 பேர் கைது

ஜெயங்கொண்டம், ஏப்.18: ஜெயங்கொண்டத்தில் மது விற்ற 3  பேர் கைது செய்யப்பட்டனர்.சிதம்பரம் மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று ஏப்ரல் 16ம் தேதி முதல் 18ம் தேதி இன்று வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உடையார்பாளையம் பகுதியில் மதுபானங்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம்  மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடையார்பாளையத்தை சேர்ந்த செல்வமணி(62), நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த சிங்காரம் (52), இடையார் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன்(46)ஆகியோர் அப்பகுதிகளில் மது பாட்டில்களை அரசு அனுமதியின்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 57 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்...