தா.பழூர், ஏப் 18 : அணைக்குடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் நான்கு மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு மாதிரி வாக்குச்சாவடி மையம் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்குடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் சுகாதாரப் பணி, மின்சாரம், கட்டிட சுற்றுசுவர் , வர்ணம் பூசுதல் , தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகளை தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது ஆய்வின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லிராணி மற்றும் ஊராட்சி செயலர் சகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மாதிரி வாக்குச்சாவடியில் இன்று வாக்களிக்க வரும் வாக்காளர்களை வரவேற்கும் விதமாக என்எஸ்எஸ் மாணவர்களை வைத்து வரவேற்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.