×

புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஏப்.18: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில், புதன்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வரும். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில், அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. சேந்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில், தற்போது மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால் ஆடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு ₹5 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த வாரம் ₹5,100க்கும், கடந்த வாரம் ₹4,200க்கு விற்பனையான வளர்ப்பு ஆடுகள் இந்த வாரம் ₹4,300க்கும் விற்பானையானது. பிறந்து ஒருமாதமே ஆன பெண்குட்டி ஆடு ₹1000க்கும், கிடாகுட்டி ₹1200க்கும் விற்பனையானது.

Tags : Budhana ,
× RELATED புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு