×

தொடக்க கல்வி பட்டயத்தேர்வு மதிப்பெண் சான்று 23ல் ெவளியீடு

நெல்லை, ஏப். 17:  தொடக்க கல்வி பட்டயத்தேர்வு  மதிப்பெண் சான்று வரும் 23ம் தேதி  ெவளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தொடக்க கல்வி பட்டயத்தேர்வின் மதிப்பெண் சான்று வரும் 23ம் தேதி  ெவளியிடப்பட உள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் வரும் 23ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி