×

பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிய 2 பேர் கைது

மானூர்,மே 14: ஆலங்குளம் அருகே துத்திகுளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கதிரேசன் (26). இவர் மானூர் ரஸ்தா அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். அங்கு சென்ற மானூர் ரஸ்தாவைச் சேர்ந்த காந்தப்பன் மகன் பெருமாள் (33), அதே பகுதியை சேர்ந்த தெக்கடியான் மகன் காமாட்சி (23) ஆகியோர் ஒரு பாட்டிலில் பெட்ரோல் கேட்டு வாங்கியுள்ளனர். ஆனால் அதற்கு பணம் தர மறுத்ததோடு மட்டுமின்றி பங்க் ஊழியருக்கு அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து மானூர் போலீசில் கதிரேசன் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து பெருமாள், காமாட்சி இருவரையும் கைது செய்தார்.

The post பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Manur ,Arumugam ,Katiresan ,Tuthigulam ,Alangulam ,Manur Rasta ,Perumal ,Gandappan ,
× RELATED மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு