×

அதிமுக ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுங்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் மனோஜ்பாண்டியன் பேச்சு

நெல்லை, ஏப்.17:  சாதனைகளை எண்ணி பார்த்து அதிமுக ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுங்கள் என நெல்லையில் அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் நிறைவு பிரசாரத்தில் பேசினார்.நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் நேற்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை கட்சி காரியாலயத்தில் இருந்து தொடங்கினார். நெல்லை புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம்,  சமாதானபுரம், மார்க்கெட், சித்தா கல்லூரி வழியாக எம்ஜிஆர் சிலையில் பிரசாரத்தை நிறைவு செய்தார். இதில் கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள் பைக்குகளில் கட்சி கொடிகளோடு திரளாக பங்ேகற்றனர்.கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசாரத்தை நிறைவு செய்து வேட்பாளர் மனோஜ்பாண்டியன் பேசியதாவது: அதிமுக தலைமையில் பலமான ஒரு மெகா கூட்டணியை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் அமைத்துள்ளனர். தேர்தலில் அதிமுக வெற்றிக்காக உழைத்த கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ஜாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கினோம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலான அதிமுக அரசு எப்போதும் மக்களையும், மக்கள் பிரச்னைகளையும் மட்டுமே பார்த்து செயல்படக்கூடியது. இந்த அரசின் சாதனைகளை எண்ணி பார்த்து அதிமுக ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுங்கள்.

 சேரன்மகாதேவி எம்எல்ஏவாக இருந்தபோது அந்த தொகுதிக்கு எவ்வளவு நன்மைகள் செய்தேனோ, அது மாதிரி நெல்லை மக்களவை தொகுதிக்கு நன்மைகளை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.  நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ்ராஜா, எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, ஜெ.,பேரவை செயலாளர் ஜெரால்டு, இளைஞரணி செயலாளர் ஹரிஹரசிவசங்கர், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் குறிச்சி சேகர், நிர்வாகிகள் பெரியபெருமாள், நாராணம்மாள்புரம் அமுஸ் முருகன், கேபிஆர் கிருஷ்ணன், படப்பை சுந்தரம், மாநில பேச்சாளர்கள் காந்திமதி நாதன், வாஸ்து தளவாய், சி.பா.முருகன், முன்னாள் கவுன்சிலர் வண்ணை கணேசன், வக்கீல்கள் ஜோதிமுருகன், வெயிலுமுத்து, பீர்முகை தீன், பாறையடி மணி, நத்தம் வெள்ளப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 கூட்டணி கட்சிகள் சார்பில் சமக நெல்லை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தர்ராஜன், நெல்லை வடக்கு பகுதி செயலாளர் அழகேசராஜா, தமாகா சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் சுத்தமல்லி முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் ஜெகநாதராஜா, மாநில செயலாளர் சரவணன், தொண்டரணி திருமலை, சண்முகம், வக்கீல் கிருஷ்ணகுமார், டிபிஎஸ் சுப்பிரமணியன், அழகுமுத்து கோன் பேரவை நிறுவனர் சுடர்ஒளி முருகன், தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி, மாவட்ட துணை செயலாளர் கேஎம்ஏ சிவா, பகுதி செயலாளர்கள் அந்தோணி, ஜலில்ரகுமான், மாரிமுத்து, ஷேக், தமமுக மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், பாமக மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், மாநில துணை பொதுசெயலாளர் அன்பழகன், நிஷ்தார் அலி ஆகியோர் பங்கேற்றனர்.


Tags : AIADMK ,speech ,Manojpandian ,phase ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...