×

கோட்டார் வியாபாரிகளிடம் அண்ணா தொழிற்சங்கம் வாக்கு சேகரிப்பு

நாகர்கோவில், ஏப்.17 : கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக குமரி கிழக்கு மாவட்ட அண்ணாதொழிற்சங்கம் சார்பில், நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நேற்று பிரசாரம் நடந்தது. தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன் தலைமை வகித்தார். அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தனர். சவேரியார் ஆலய சந்திப்பு, செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், அதிமுக நகர செயலாளர் சந்துரு, பா.ஜ. நகர தலைவர் நாகராஜன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் வக்கீல் ஜெயகோபால், நவாஸ், ஆட்டோ பிரிவு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anna ,trade union ,merchants ,Kotar ,
× RELATED போதைப்பொருள் தளமாகும் குஜராத்: அதிமுக மாஜி அமைச்சர் தாக்கு