×

கடமலைக்குண்டு அருகே செந்நாய்கள் விரட்டி கடமான் பலி

வருசநாடு, ஏப்.16: கடமலைக்குண்டு அருகே செந்நாய் விரட்டியதில் கீழேவிழுந்த கடமான் பலியானது. கடமலைக்குண்டு அருகே அய்யனார்புரம் கோட்டைமலை அடிவாரத்தில் தனியார் தோட்டப் பகுதி உள்ளது. இங்கு 4 வயது பெண் கடமான் கால் ஒடிந்த நிலையில் இறந்து கிடந்தது. செந்நாய்கள் விரட்டியதில் கடமான் தடுமாறி கீழே விழுந்து பலியானது தெரிய வந்தது.தகவலறிந்த கண்டமனூர் வனச்சரகர் குமரேசன், வனவர் செல்வராஜ் ,வனக்காப்பாளர் சண்முகம், வாட்சர் குருசாமி, கால்நடை மருத்துவர் வெயிலான், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் ஆகியோர் சென்று கடமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். இதன் பின் அப்பகுதியில் கடமானை புதைத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: குடிநீருக்காக தனியார் தோட்டங்களுக்குவரும் மான்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது. வனப்பகுதியில் மான்களுக்கு தண்ணீர் தொட்டி வைத்து தண்ணீர் தேக்கி வைத்தாலும், இது போல மான்கள் பலியாவது வழக்கமாக உள்ளது என்றனர்.

Tags : Sevenants ,Kaithalai ,
× RELATED விதை நேர்த்தி விழிப்புணர்வு