×

அனுமதி பெற்றதாக கூறி போலீசை ஏமாற்றிய பாஜக கடிதம் கேட்டதால் பாதியில் முடிந்த புஷ்பவனம் குப்புசாமி கச்சேரி

காரைக்குடி, ஏப். 16: காரைக்குடியில் பாஜகவுக்கு ஆதரவாக புஷ்பவனம் குப்புசாமி நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றதாக கூறி பாஜகவினர் நிகழ்ச்சி நடத்தியநிலையில் போலீசார் கடிதத்தை கேட்டதால் பாதியில் பேக் செய்து எஸ்கேப் ஆனார்கள் காரைக்குடி கீழ ஊரணி பகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உயர் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றதாக கூறி மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்தினர். இந்நிலையில் அப்பகுதியில் பிரச்சாரம் செய்ய முறையாக அனுமதி பெற்று அமமுக வேட்பாளர் பாண்டி பிரச்சாரம் செய்ய வந்தார்.

தங்களது இசை நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்பதால் அமமுக வேட்பாளரை பிரச்சாரம் செய்யவிடாமல் பிரச்சனை செய்தனர். பிரச்சனை உச்சகட்டத்துக்கு சென்று இருதரப்புக்கும் கைகலப்பு வரும் நிலை உருவானது. போலீசார் தலையிட்டு அமமுகவினரை கலைந்து போகச்செய்தனர். அதன்பிறகு கச்சேரி நடந்தது வந்தது. பாஜகவினர் பிரச்சனை செய்ததால் சந்தேகமடைந்த போலீசார் அனுமதி கடிதத்தை கேட்டனர். இங்கு உள்ளது, அங்கு உள்ளது என தேடுவதுபோல் போக்கு காட்டிய பாஜகவினர் ஒருகட்டத்தில் அனுமதி பெறாததை ஒப்புக் கொண்டனர். அனுமதியில்லாமலேயே மேடை அமைத்து கச்சேரி நடத்தியது விசாரணைக்கு பின்னரே தெரியவந்தது. அனுமதி பெறாததை அறிந்த புஷ்பவனம் குப்புசாமி சைலன்டாக பாதியுடன் பேக் செய்து எஸ்கேப் ஆனார்.

Tags : Pushpavanam Kuppasamy ,concert ,half ,
× RELATED துலாம்