×

பரிசளிப்பு விழா

மதுரை, ஏப். 16: மதுரையை அடுத்த ஒத்தக்கடையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை,
ஓவியம், நடனம், கதை சொல்லல், பாடல் நினைவுத்திறன், தனி நடிப்பு, சிலம்பம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டிமன்ற நடுவர் கவிஞர் மூரா, அம்மாபட்டி தலைமையாசிரியை மங்களேஸ்வரி மற்றும் காளிதாஸ் பரிசுகளை வழங்கினர். ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags : Gift Festival ,
× RELATED பரிசளிப்பு விழா