×

பசுவந்தனை அருகே விவசாயி வீட்டில் ரூ.1.12 லட்சம் பறிமுதல்

ஓட்டப்பிடாரம், ஏப். 16: பசுவந்தனை அருகே விவசாயி வீட்டில் ரூ.1.12 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்,  பசுவந்தனை அடுத்த வடக்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் ராகவன் (52). அப்பகுதியில் உள்ள 100 ஏக்கரில் எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை  சாகுபடி செய்துள்ளார். இவரது வீட்டில் பணம் பதுக்கியதாக கிடைத்த தகவலையடுத்து பசுவந்தனை எஸ்ஐ மற்றும் போலீசார் நேற்று திடீரென  சோதனை நடத்தினர். இதில் வீட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.1.12 லட்சத்தை பறிமுதல் செய்து சென்றனர். தேர்தல் பறக்கும் படை, வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் நடந்துள்ள இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கலெக்டர், எஸ்பி விளக்கம் அளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Tags : house ,Pasavantan ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி