×

ஆண்டிபட்டி அருகே பொதுக்கூட்டம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம்

தேனி, ஏப்.14:  ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தார். ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி.கே.பழனிசாமி தலைமை வகித்தார். துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்.கே.ராஜூ, உதயகுமார், மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாமக மாநிலத் தலைவர் கோ.க.மணி, தமிழக மக்கள்முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார். மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமணி, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மயில்வேல், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழிசேகர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோருக்கு வாக்குசேகரித்து பிரதமர் மோடி உரையாற்றினார். தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் நன்றி கூறினார்.

Tags : Campaigning ,campaign ,Andipatti Modi ,AIADMK ,
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...