×

ஆன்மிக மலர் செல்போன் கடையை உடைத்து திருட்டு

தேனி, ஏப். 12: தேனி நகர் கோட்டைக்கலம் தெருவில் குடியிருப்பவர் வினோத்குமார்(29). இவர் தேனியில் பெரியகுளம் சாலையில் அரவிந்த் கண்மருத்துவமனை அருகே செல்போன்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு நேற்று காலை கடைக்கு வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்போது கடையில் வைத்திருந்த ரு.6 ஆயிரம் ரொக்கம் மற்றும் 13 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வினோத்குமார் அளித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சாலையோர கடைகளில் தொடர் திருட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை