×

நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நத்தம், ஏப். 11: நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடந்தது. நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில்  பங்குனி திருவிழா மார்ச் 31ம் தேதி துவங்கியது. இதையொட்டி அன்று காலை  சந்தனகருப்பு சுவாமி கோயிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வரப்பட்டது.  அன்றிரவு பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 5ம் தேதி  தோரண மரம் ஊன்றுதல், 7ம் தேதி அம்மன் குளத்தில் கரகம் பாலித்து அம்மன்  அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அரண்மனை மாவிளக்கு எடுத்தல்,  வாணவேடிக்கை நடந்தது. 8ம் தேதி காலையில் குளத்திலிருந்து பக்தர்கள்  பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்தனர். அன்று பிற்பகல் பக்தர்களுக்க  அன்னதானமும், இரவு ஊர் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று  முன்தினம் அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் சந்தனகுடம், அரண்மனை பொங்கல்,  ஊர் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுகள் நிகழ்ச்சி நடந்தன. தொடர்ந்து  அன்றிரவு கரகம் அம்மன் குளம் சென்றடைந்தது. நேற்று மஞ்சள் நீராடுதலுடன்  விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர், மீனாட்சிபுரம்  மக்கள் செய்திருந்தனர்.

Tags : Kaliamman ,temple festival ,Meenakshi ,Natham ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு