×

கீழ்வேளூர் அருகே காவலருக்கு கொலை மிரட்டல் 2 பணியாளர்கள் கைது

நாகை, ஏப்.11.  கீழ்வேளூர் அருகே காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஒக்கூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையத்தில்  பொருட்கள் திருட்டுபோவதாக கூறி  காவலர்களை கொண்டு  வேலை முடித்து விட்டு வெளியே செல்லும் தொழிலாளர்களை சோதனை செய்து அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து காவலர்கள் தொழிலாளர்களை சோதனை செய்த போது அந்த நிலையத்தில் பணியாற்றும் பணியார்கள் ஒக்கூரை சேர்ந்த  செந்தமிழ்செல்வன் (23), சசிக்குமார் (31) ஆகிய இருவரும் காவலர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியும், கத்தியை  காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகூர் போலீசில்  நாகையை அடுத்த பொய்கைநல்லூரை சேர்ந்த ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்கு பதிந்து  செந்தமிழ்செல்வன், சசிக்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags : policemen ,Kilaveloor ,
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...