நெய்வேலி, ஏப். 11: அறந்தாங்கியில் பெரியார் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகளை கண்டித்து திராவிட கழகம் சார்பில் நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் மணிவேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தாமோதரன், உதயசங்கர், பஞ்சமூர்த்தி, திமுக சிவந்தான்செட்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, வார்டு செயலாளர் அந்தோணிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.