×

நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

கூடுவாஞ்சேரி, ஏப்.11:கூடுவாஞ்சேரி அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். காட்டாங்கொளத்தூர் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் கருணாநந்தன் (40). இவரது மனைவி ரமீலா (33). இவர்களுக்கு கீர்த்தனா (17), தீபிகா (15) ஆகிய மகள்களும், ஜெகதீஷ் (11) என்ற மகனும் உள்ளனர். 3 பேரும் காட்டாங்கொளத்தூரில் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கின்றனர். ஜெகதீஷ் 6ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருணாநந்தன், மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார். இதையடுத்து ராமீலா கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் ஜெகதீஷ், தனது நண்பர்களுடன் மறைமலைநகர், நகராட்சிக்கு உட்பட்ட, கோனதி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றான்.

அப்போது சிறுவன் ஜெகதீஷுக்கு நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்த நண்பர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். தகவலறிந்து, கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கிய ஜெகதீஷை சடலமாக மீட்டனர். இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசிாரிக்
கின்றனர்.

Tags : school pupil ,friends ,well ,
× RELATED நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து...