×

திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் தீவிர தேர்தல் பிரசாரம்

திருவாரூர்,  ஏப். 10:  திருவாரூர் சட்டமன்ற  தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் நேற்று திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட மாங்குடி மற்றும் கொரடாச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் ரூ 34 கோடி மதிப்பில் சாலைகள், பாலங்கள், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளை செய்து தந்துள்ளது. திருவாரூர் நகரில் 30 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ 5 கோடியே 40 லட்சம்  மதிப்பில் தானியங்கி குடிநீர் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் நகராட்சி சுற்றுப்புறங்களில் புதிய குடியிருப்புகள் ஏற்பட்டுள்ளதால்  இவர்கள் கூடுதல் வசதிகளை பெறவும், காலவிரயத்தினை தவிர்க்கும் வகையிலும்  புறநகர் பகுதிகளை திருவாரூர் நகராட்சியுடன் இணைத்து நகராட்சியின் தரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திட வேண்டுகிறேன். இவ்வாறு வேட்பாளர் ஜீவானந்தம் தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது பெண்கள் பலரும் வேட்பாளருக்கு  ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags : Jeevanantham ,Tiruvarur ,AIADMK ,election campaign ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்