கூடலூர், ஏப்.10: கூடலூர் ஜானகி அம்மாள் அரங்கில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் 24ம் ஆண்டு விழா தலைவர் டாக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் பங்கோடா, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைவர் மாணிக்கசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீலகிரி மாவட்ட தலைவர் எம்.நஞ்சன் கலந்து கொண்டார். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் உயிர் நீத்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கான இலவச மருத்துவம் பெறுவதற்கான வழிமுறைகள், மூத்த குடிமக்களுக்கான அரசு சலுகைகள், வரும் மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் இணைச் செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
ரோஜா பூங்கா சாலையில்