×

மூலைக்கரைப்பட்டி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.69 ஆயிரம் பறிப்பு

நாங்குநேரி,  ஏப். 10:   மூலைக்கரைப்பட்டி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கியதோடு அவரிடம் இருந்த ரூ.69 ஆயிரத்தை  பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி டோல்கேட் பகுதியில் செயல்படும் டாஸ்மாக்  கடையில் விற்பனையாளராக மூலைக்கரைப்பட்டி பெருமாள்நகரை சேர்ந்த  முகமது தவுபிக் (44)  பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு  விற்பனை  முடிந்த பிறகு விற்பனை தொகை ரூ.69 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது காரில்  வீட்டுக்கு சென்றார். வீட்டு முன்  காரை நிறுத்திவிட்டு இறங்கி  வீட்டு கதவை திறக்க முயன்றார். அப்போது அங்கு இருளில் மறைந்து இருந்த  மர்மநபர்கள், சிலர் திடிரென வந்து முகமது தவுபிக்கை  அரிவாளால்  தாக்கிவிட்டு  அவரிடமிருந்த பணப்பையை பறித்து சென்றனர். காயம் அடைந்த அவர்  நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  புகாரின்பேரில் மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து தாக்குதலில்  ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.



Tags : Moolikkalipatti ,Taskmak ,
× RELATED திண்டுக்கல் அருகே டாஸ்மாக் ஊழியரை...