×

ஊரப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் மர்மமாக இறந்து கிடந்த புள்ளிமான்

கூடுவாஞ்சேரி, ஏப்.10: ஊரப்பாக்கம் அருகே ரத்த காயங்களுடன் புள்ளி மான் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் கிராமம் அங்காளம்மன் கோயில் தெருவில், குடியிப்புக்களுக்கு அருகே நேற்று முன்தினம் காலை ஒரு புள்ளிமான் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. அந்த மானை, அப்பகுதியில் உள்ள தெரு  நாய்கள் கடித்து குதறியது.தகவலறிந்து தாம்பரம் வனத்துறை அலுவலர் வித்யாபதி மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டு பிரோத பரிசோதனைக்காக வண்டலூரில் உள்ள பூங்கா மருத்துவமனைக்கு  அனுப்பினர். மேலும், புள்ளிமானை தெரு நாய்கள் கடித்து குதறியதில் இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதி காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், ஆயிரக்கணக்கான மான்கள் சுற்றி திரிகின்றன. தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காக மக்கள்  குடியிருக்கும் பகுதிக்கு மான்கள் வருகின்றன. அதுபோல் வந்த மான், நாய்கள் கடித்து இறந்து இருக்கலாம் என்றனர்.

Tags : landmark ,area ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது