காஞ்சிபுரம், ஏப்.10: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜனவரி 31, 2019 தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அதைத்தொடர்ந்து 1.1.2019 அன்று வரை விடுபட்ட வாக்காளர்கள், தங்கள் பெயரை சேர்த்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. அதையொட்டி கூடுதலாக 69,774 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனுடன் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர்விவரம் வருமாறு;
ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியான சோழிங்கநல்லூர் தொகுதியை தவிர்த்து, மற்ற 10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் உள்ளனர். மொத்தத்தில் ஆண் வாக்காளர்கள் 18,59,903, பெண் வாக்காளர்கள் 19,00,485. இது ஆண் வாக்காளர்களை விட 40,582 கூடுதல் ஆகும்.