×

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு

சென்னை, ஏப். 10: கூடுவாஞ்சேரியில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பஸ் (தஎ இ18) நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. டிரைவர் சிற்றரசு (50) பணியில் இருந்தார்.பஸ், சென்னை அண்ணாசாலை ஆனந்த் தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது. அப்போது ஒரு ஆட்டோ, பஸ்சின் குறுக்கே வந்து நின்றது. இதை பஸ் டிரைவர் சிற்றரசு (50), கண்டித்தார். இதனால், இருவருக்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசி, முன் பக்க கண்ணாடி உடைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார்.இதுகுறித்து டிரைவர் சிற்றரசு, ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து