×

சந்தவேலூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்

பெரும்புதூர், ஏப்.10: பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சந்தவேலூர் ஊராட்சியில் உள்ள தனியார் பன்னாட்டு உறைவிட பள்ளியில்  மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு  முகாம் நடந்தது. இதில் நாடகம், கோலப்போட்டி, வினா விடை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்னவசந்தி கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், காமராஜ், பிரபாகர், ஏழுமலை, அனுசுயா, வட்டார  ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், சந்தவேலூர் ஊராட்சி செயலர் நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் வாக்களிப்பது நம் கடமை என மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் 100 சதவீதம் வக்களிப்போம் என்று உறுதிமொழி  ஏற்றுக்கொண்டனர்.

Tags : Voting Awareness Camp ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஆய்வு