×

தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டியவர் கைது

ஜெயங்கொண்டம், ஏப். 9: ஜெயங்கொண்டம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயங்கொண்டம் பகுதியில் இந்து மதம், இந்து மத நம்பிக்கை, இந்துமத சடங்குகளை தொடர்ந்து இழிவுப்படுத்தியும், மதமாற்றத்தை ஆதரித்தும் வருகிற இந்து விரோத கூட்டணிக்கா உங்கள் ஓட்டு, இந்துக்களே சிந்திப்பீர்கள் என்று இந்து முன்னணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு விஏஓ சிவகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Poster cleric ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...