உசிலம்பட்டி, ஏப். 8: உசிலம்பட்டி அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் சங்கிலி(25), இதே ஊரைச்சேர்ந்த பால்ராஜ் மகன் கொடிமுடிசங்கரன்(26), பெருங்காமநல்லூரைச் சேர்ந்த அய்யனார் மகன் சசிக்குமார்(22), ஆகிய மூவரும் ஒரே டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். உசிலம்பட்டி-பேரையூர் சாலை எழுமலை பிரிவு அருகிலுள்ள பாண்டிகோவில் அருகே இவர்கள் வந்து கொண்டிருந்த டூவீலரில் கார் ஒன்று மோதியது. அதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி நகரப்போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.