×

டூவீலர் மீது கார் மோதி 3 பேர் படுகாயம் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உசிலம்பட்டி, ஏப். 8: உசிலம்பட்டி அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் சங்கிலி(25), இதே ஊரைச்சேர்ந்த பால்ராஜ் மகன் கொடிமுடிசங்கரன்(26), பெருங்காமநல்லூரைச் சேர்ந்த அய்யனார் மகன் சசிக்குமார்(22), ஆகிய மூவரும் ஒரே டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். உசிலம்பட்டி-பேரையூர் சாலை எழுமலை பிரிவு அருகிலுள்ள பாண்டிகோவில் அருகே இவர்கள் வந்து கொண்டிருந்த டூவீலரில் கார் ஒன்று மோதியது. அதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி நகரப்போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags : toweler ,
× RELATED திருப்பரங்குன்றம் அருகே போலீசில்...