×

பணகுடியில் ஆட்டோவில் தவறவிட்ட 16 பவுனை ஒப்படைத்த டிரைவர்

பணகுடி, ஏப். 8: வள்ளியூரைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் செல்வகுமார் (45). பணகுடி பகுதியில் திருமண மண்டபத்தில் நடந்த நேற்று காலை நடந்த திருமண விழாவில் பங்கேற்கும்பொருட்டு தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை அனுப்பிவிட்டு மண்டபத்திற்கு சென்றபோது கையில் வைத்திருந்த 16 பவுனுடன் இருந்த நகை பெட்டி காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து புகார் கொடுக்க பணகுடி போலீஸ் நிலையம் சென்றபோது இன்ஸ்பெக்டர் ஹாகுல் ஹமீது மற்றும் போலீசார் விசாரித்து விட்டு சம்பவ இடத்திற்கு புறப்பட்டனர். அதே வேளையில் அங்கு வந்த சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரான ஜெகன்,  செல்வகுமார் ஆட்டோவில் விட்டுச்சென்றதாகக் கூறி 16 பவுன் நகைகளை ஒப்படைத்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் ஆகும். இதையடுத்து டிரைவரின் நேர்மையை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் பாராட்டினர்.

Tags : pawns ,
× RELATED சோழிங்கநல்லூர் ஐடிபிஐ வங்கியில் போலி...