×

பாளையில் அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் விநியோகித்து மனோஜ்பாண்டியன் பிரசாரம்

நெல்லை, ஏப். 8:  நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், அதிமுக அரசின் மக்கள்நலத் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பாளையங்கோட்டையில் மக்களிடம் வழங்கி வாக்குசேகரித்தார்.
 தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வாக்குசேகரித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று பாளை மகாராஜநகர் தூய திரித்துவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியில் வந்த கிறிஸ்த மக்களைச் சந்தித்து அதிமுக அரசின் மக்கள்நலத் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குசேகரித்தார். தொடர்ந்து மகாராஜநகர் ரவுண்டானா, உழவர் சந்தை, தியாகராஜநகர், ஹைகிரவுண்ட், அன்புநகர், காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரசாரத்தில் வேட்பாளருடன் அதிமுக மகளிர் அணி மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி., பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி, அரசு வக்கீல்கள் ராஜேஷ்வரன், துரைமுத்துராஜ், பகுதி செயலாளர் காமராஜ், அப்ரின் பீர்முகமது, முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில்ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி வேல் பாண்டியன், சத்தியானந்த், முன்னாள் கவுன்சிலர் பரமசிவன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்று வாக்குசேகரித்தனர்.

Tags : campaign ,Manojpandian ,AIADMK ,
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...