மதுராந்தகம், ஏப். 8: காஞ்சிபுரம் மாவட்ட ரெட்டி நல சங்கத்தின் சார்பாக 6ம் ஆண்டு யுகாதி குடும்ப விழா ஈவிபி அறக்கட்டளை வளாகத்தில் மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோயில் பகுதியில் நேற்று நடைபெற்றது.
விழாவில் ஒரு பகுதியாக 80 வயது பூர்த்தி அடைந்த 108 தம்பதிகளுக்கு மாலை மரியாதை அணிவித்து அவர்களிடம் அனைவரும் ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு விவேகானந்தா ரெட்டி தலைமை தாங்கினார். நரசிம்ம ரெட்டி, தேவதாஸ் ரெட்டி பூபாலன் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கொண்டா ரெட்டி அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஈவிபி குழும தலைவர் பெருமாள்சாமி வாழ்த்துரை வழங்கினார். மேலும் இதில் சக்கரபாணி ரெட்டி வெங்கட பெருமாள் ரெட்டி, சிவராமன் ரெட்டி, ஸ்ரீ ராம் ரெட்டி, லட்சுமிபதி ராதாகிருஷ்ணன் ரெட்டி, பாலமுருகன் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பள்ளி கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.