சென்னை: தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர்.
தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து நேற்று முன்தினம் மாலை மயிலாப்பூர் தொகுதி 126வது வட்டம் வால அமர்ந்த அம்மன் கோயில் அருகில் நடைபெற்ற பிரசாரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர். நட்ராஜ் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். உடன் மாவட்ட செயலாளர் வி.என் ரவி, பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன், 126வது வட்ட செயலாளர் துரைக்கண்ணு, 173வது வட்டம் குணா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பாமக மாவட்ட செயலாளர் சிவகுமார், தேமுதிக ஆனந்தன், பாஜக டால்பின் ஸ்ரீதர், தமாகா கொட்டிவாக்கம் முருகன், புதிய நீதி கட்சி துரைராஜ், புரட்சி பாரதம் ஆதிவேந்தன் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பட்டினபாக்கம் சீனிவாசபுரம் மீனவ பகுதியில் வாக்கு சேகரித்தார். மக்கள் வழிநெடுங்கிலும் மலர்த்தூவி, சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியதாவது: மக்களுக்கு நன்கு அறிந்தவர், படித்தவர், பண்பானவர், பல நலத்திட்ட உதவிகள் கிடைக்கச்செய்தவர், பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தை தனது சொந்த பணத்தில் தொடங்கிவைத்தவர், ஜெயவர்தன் என்று வழியெங்கும் மக்கள் சொல்கின்றனர். மக்கள் வழிநெடுங்கிலும் சொந்த சகோதரரை போல் ஜெயவர்னை வரவேற்கின்றனர். இவ்வாறு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசினார்.